நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

தாமாக நடப்பது விதி
நாமாக உருவாக்குவது மதி
(பதினாறு கவனகர் திருக்குறள் இராம கனக சுப்புரத்தினம்)

ஆன்மீகமும் விஞ்ஞானமும் இரு சகோதரர்கள் என்று அமரர் வாசு கண்ணன் எழுதிய “உள் மன ஆற்றல்” புத்தகத்திலிருந்து படித்த ஞாபகம். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் நமது இந்தியாவில் இருப்பது இந்தியர் அனைவருக்கும் பெருமை. இதைப்போல் பூமியின் தோற்றமும் ஒரு அதிசயமானதுதான். நவக்கிரகங்களை உற்று நோக்கினால் காந்த சக்தி எவ்வாறு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நாம் அறியலாம். இந்தக் காந்த சக்தி மனித உயிரின் சக்தியில் ஊடுருவுகின்றது.

மொத்தம் 2600 வகை உயிரினங்கள் உள்ளன. இதில் மனிதன் தான் தனித்தன்மை படைத்தவனாக இருக்கின்றான். காரணம் மனிதனின் மூளையை மனம் என்று ஒரு பொருள் இருப்பது.

மனிதனால் உருவாக்கப் பட்ட வீணைகள் எல்லா வீணைகளும் ஒன்றுதான். ஆனால் அதை மீட்டும் விரல்களைப் பொறுத்தே அதில் உருவாகும் இசை வீணைக்கு வீணை வேறுபடுகின்றது. மனித மூளையும் அனைவருக்கும் ஒரே மாதரிதான். நீயூட்ரான்கள், டெண்ட்ராட்ஸ், மின்காந்தத் துகள்களின் இயக்கம்தான். மூளையின் அமைப்பும், ரசாயனமும் பவுதிகக் கூட்டணுக்களும், அவை இயங்கும் விதமும் எல்லோர்க்கும் ஒருமாதிரியே. ஆனால், மனமும், குணமும் அப்படி இல்லையே – அவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்றன. அவற்றின்படியே அவர்களின் செயல்பாடுகளாம் அமைகின்றன என்று கவிஞர் தியாகு, “வாழ்ந்திடச் சொல்கிறேன்” தன்னம்பிக்கைத் தொடர் ( நன்றி, தினத்தந்தி, இளைஞர் மலர் 14.11.2015 ) கூறுகிறார்.

பதினாறு கவனகர் “திருக்குறள் இராம கனக சுப்புரத்தினம்” மெகா தொலைக்காட்சியில் “வெற்றி நிச்சயம்” என்ற நிகழ்ச்சியில், ஈ-க்கும் , தேனீக்கும் ஒப்புமை கூறுகிறார். ஈக்கள், நறுமணம் வீசும் பூக்களிலும் மொய்க்கும். அதே சமயம் துர்நாற்றம் வீசுகின்ற பொருட்களிலும் மொய்க்கும். ஆனால். தேனீக்களோ நறுமணம் வீசுகின்ற பொருட்களில் தான் மொய்த்து , கூட்டைக்கட்டி, தேனைச் சேமிக்கிறது. இது போல, மனத்தூய்மை பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருட்பாலில் (அரசியல்), சிற்றினம் சேராமை அதிகாரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மனம் தூய்மை, செய்வினை தூய்மை இரண்டும்
சினம் தூய்மை தூவா வரும்.
திருக்குறள் 455

யோகத்திறனும், கற்பனை காணும் திறனும். நினைவு ஆற்றலும் மனித மனத்திலிருந்துதான் உருவாகுகின்றது. இதுவே தான் மனிதனின் முன்னேற்ற வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்கின்றது. ஆன்மீகத் துறையில் எத்தனையோ ஞானிகள் மக்கள் நலனுக்காக வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் மனதில் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இராம கிருஷ்ணர், விவேகானந்தர், சாய்பாபா போன்ற மகான்கள் சற்றும் சுயநலமின்றி வாழ்ந்தனர் என்று விக்கரவாண்டி வி. ரவிச்சந்திரன் “மனோசக்தி” மாத இதழில் (ஜனவரி 2015) , “பெயரும் புகழும் பெறுவது எப்படி” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்மீகத்தைப்பற்றி ஆங்கில எழுத்தாளர் “Richard A. Bowell” தனது புத்தகத்தில் “The Seven Steps of spiritual Intelligence “( The practical Pursuit of purposes, success and Happiness,), Nicholas, Brealey Publishing, London, Boston, USA, First Publishe in the USA 2005) ஏழு நிலைகள் / படிகளில் விளக்குகிறார்.

1)Awareness 2) Meaning 3) Evaluation 4) Being Centred 5) Vision 6) Projection 7) Mission
எனவே, நாம் நம்முடைய மனதை நன்கறிந்து, அறியாமையிலிருந்து விழிப்புணர்வு பெற்று, மனதை ஒருமைப்படுத்தி மகத்தான சாதனை செய்வோமாக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *