-கவிஜி 

மழை தேசப்
பாலை வனத்தில்
வானுயர மரங்களின்
பூமி தொடாத கண்ணீர்
கொடுஞ்சூடு…!

தொலை தூரப்
பெருவானில்
நதிதேடும் இரு
சிறகின் புரியாமை
வழி தேடல்…!

கரை தாண்டும்
சிறைப் பூக்கள்
உதிராத வழிப் பாதையில்
இளைப்பாறக் கிடைக்காத
நிழலான மரக் கூடு…!

வெந்து தணிய
வேகத் தடையில்லை
என்று கனிந்த
காற்றுச் சொல்லொன்றாய்க்
கனவுடைத்த
கருங்கல்…!

எண்ணக் குதிரையில்
ஏகாந்தம் குலை நடுங்கப்
பதியாத நினைவுகளைப்
பாதி பாதியாய்
அடுக்கிக் கொண்ட
ஆற்றுப் படுகையில்
என்
திருப்புக் காட்சி…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *