ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 36

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மனிதன் விதிக்குப் பலியானவர் !
“நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு மூலம் என்ன ? இந்தப் பூமியின் பொந்துக் குள்ளிருந்து வந்த பிறகு நீங்கள் உமது முதல் தடத்தை எடுத்து வைத்தீரா ?
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________

ஆணுக்குப் பலியான பெண்டிர்
___________________

கடவுள் வனப்புடன் படைத்த
நீ ஓரிளம் பெண்ணா ?
செல்வந்தர்
உன் இதயத்தை விட்டு
உன்னுடலை விலைக்கு வாங்கி
மோக அணைப்புக்கு
இரையாகி
இன்னல் பட்டு வரும்
நீயோர்
ஏமாளிப் பெண்ணா ?
___________________

இப்படித் துன்புறும் பெண் ஒருத்தி
நீயானால்
மனிதன் விதிக்குப்
பலியான பாவை நீ !
துயர்ப் படுபவள் !
வலுத்தோர் அழுத்தப் பிடியில்
அநியா யத்தில்
பழுக்கும் கனி இன்னல் !
செல்வந்தர் கொடுமைச் செருக்கு !
ஒழுக்க மற்றோர் புரியும்
இழுக்குகள் !
___________________

என் ஆறுதல் மொழிகளை
உனக்களிப்பேன்
என்னுயிர்க் காதலி !
நமக்குப் பின்னால்
ஒளிந்திருப்பது
பேராற்றல் படைத்த ஒன்று
இந்த மண்ணுல குக்கு
அந்தப் புறத்தில் !
நேயமும் பரிவும்
நேர்மையும் நியாயமும்
நிறைந்தது !
___________________

மலரைப் போன்றவள் நீ
மரத்து நிழலில்
வளர்ந்து வருபவள் நீ
தென்றல் சுமந்துன் வித்துக்களை
கதிரோன் வெப்பத்தில்
விதைக்கும் !
மீண்டும் முளைப்பவள் நீ
மேனி அழகுடன் !
___________________

குளிர்காலப் பனிப் பொழிவில்
வளைந்திடும்
இலை உதிர் மரம் நீ !
வசந்தம் வந்துன் மீது
பசுமை ஆடையைப் போர்த்தும் !
உன் புன்னகை மறைக்கும்
கண்ணீர்த்
திரையைக் கிழித்திடும்
உண்மை !
என்னரும் சகோதரிகளே !
உம்மை நேசிக்கிறேன்
இணைத்துக் கொள்வேன்
என்னுடன் !
வெறுக்கிறேன் உமது
விரோதிகளை !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *