c61c6771-0e8b-4ac8-8341-9e26e2c6c78a

இப்படித்தான் ஒருமுறை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு
விடிகாலை இருளில் திருவல்லிக் கேணி நாகோஜி ராவ்
சந்து வழியாக செல்ல வேண்டியதாயிற்று(அப்போது கோயிலில்
குமபாபிஷேக சமயம்….அதனால் டி.பி.கோய்யில் தெரு
முன்வாசலை மூடியிருந்தார்கள்)…..இருள் விலகி 6 மணி வாக்கில்
அதே வழியாகத் திரும்பிய எனக்கு திக்கென்றது….நாகோஜி ராவ்
சந்தை அடைத்தபடி சுமார் 400 மாடுகள்….ஒரு மாட்டின் முன்பு கேசவ்
வரைந்தது போல், பரட்டைத் தலையோடு ஒரு பையன்
அமர்ந்திருந்தான்….அவன் கண்ணனாக இருக்கும் பக்ஷத்தில்
”நான்கட்டிக் கொள்வேனோ”….!நமக்கு பீலிமயில் சூடி,
பீதாம்பர தாரியாக காட்சி தந்தால் கட்டிக் கொள்வோம்….
”சர்வம் பிரம்ம மயம்….ஜகத் மித்யை” சொன்ன ”மனீஷா
பஞ்சக” ஆதிசங்கரர் நினைவுக்கு வந்தார்….ஆன்மீகத்திற்கு
முதல் எதிரி பாரதியார் சொன்ன ”காட்சிப் பிழை”…..
அதையும் தாண்டிப் புனிதமானது பக்தி….யார் கண்டார்கள்….
அன்று அமர்ந்திருந்த அந்தப் பரட்டைத் தலை பையன்
”கண்ணன்தானோ” !….வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனோ !
”யாமறியேன் பாராபரமே”….கேசவ்வின் இந்த ஓவியம்
பாகவத சாரம்….வாழ்க கேசவ்….வளர்க அவர் தூரிகைப் பணி”….!

”அட்டைக் கரியாய்ப்ப ரட்டைத் தலையோடு,
வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -கொட்டிலில்
வாலாட்டும் மாட்டுக்கு, நீலாம் பரிராகத்,,
தாலாட்டு பாடுகிறான் தாமு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *