‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலம் பள்ளிக்கு உதவி

0

அறம் செய விரும்பு திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டம் குக்கிராமத்தின் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உதவி:

“ஆனந்த விகடன் – ராகவா லாரன்ஸ்” ஆகியோரின் “அறம் செய விரும்பு” திட்டத்தின் கீழ் அறம் செய விரும்பு திட்டத்தில் உதவி கோரிய சிவகங்கை மாவட்டம் …
காரைக்குடியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்கோட்டை ஒன்றியம் நேமம் பழையூர் என்கிற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு 50 லிட்டர் நல்ல தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. அந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை  மாட்டுவதற்கு பணியாளர் அவர்கள் சென்னையில் இருந்து வந்து பகல் முழுவதும் வேலை செய்தார்.

அறம் செய விரும்பு

 

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அந்த ஊரில் கடைகள் இல்லாத நிலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழசிவல்பட்டி என்கிற ஊருக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொடுத்து மிகுந்த உதவியாக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்களும், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களும் எங்களை இன் முகத்துடன் வரவேற்றனர். தண்ணீரைக் குடித்து விட்டு அருமையாக இருப்பதாகச் சொன்னார்கள். மாணவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அதனை விட தங்கள் மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்து விட்டதைப் பார்த்து தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசம். அதனைக் கண்ட நமக்கும் சந்தோசம்.

படக்குறிப்பு:  பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்களும்  மாணவர்களும்
லெ. சொக்கலிங்கம்,
அறம் செய விரும்பு – தேவகோட்டை.

 

 

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *