உலக எய்ட்ஸ் தின நாள் விழிப்புணர்வு

0

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.

aids

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாகவும், நல்ல பழக்கங்களை சிறு வயதிலேயே கற்று கொள்ளவேண்டும் என்றும், எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய் இன்று மேலாண்மை செய்ய கூடிய வகையில் நம் நாட்டில் உள்ளது. பருவ வயதில் வரக்கூடிய மன பதட்டங்களை எதிர்கொள்ள ஆசிரியரின் உதவியுடன் நல்ல பழக்கங்களை பழகிக் கொண்டாலே எந்த நோயும் வராது என்று பேசினார். மாணவர் முனீஸ்வரன், மாணவிகள் சௌமியா, தனம் ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழாவில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் பேசினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

 

 

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *