ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 37

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

“சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு முத்தமிட்ட பிறகு, நன்னெறி நூலிலிருந்து ஒரு வரியாவது எடுத்து நீ உச்சரித்தாயா ? மரணம் உன் செவிகளை அடைத்த பிறகு வாழ்க்கையின் கீதத்தை ஒரு கணமாவது நீ கேட்டாயா ?”
கலில் கிப்ரான் (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

___________________

உயரத்தில் நம்மைத் தூக்கும்
இந்த வாழ்க்கை !
ஓரிடத்தி லிருந்து
வேறோர் இடத்துக்கு நம்மை
ஏற்றிச் செல்லும் !
ஒரு புள்ளியி லிருந்து
அடுத்த புள்ளிக்குத்
நகர்த்தும் ஊழ்விதி நம்மை !
இந்த இரட்டைக்கும்
இடையே
சிக்கியுள்ள நமக்குச்
செவியில் கேட்கின்றன
பயங்கரக் குரல்கள் !
இடையூறு
தடை யீடுகள் மட்டுமே
நம் கண்ணில் படும் !
___________________

எழிலரசி தன்னைக் காட்டுவாள்
நமக்கு அவள்
புகழ் ஆசனத்தின் மேல்
வீற்றிருக்கும் போது !
ஆயினும்
நாமவளை நெருங்குவது
காம இச்சை யால் ! அவளது
தூய்மைக் கிரீடத்தை
அபகரித்து நமது
தீய செயலால் அவள்
ஆடையை
அசுத்தப் படுத்திவோம் !
___________________

காதல் பணிவாக
நம்மருகே உலவு கிறது
ஆயினும்
நாமதை விலக்கி ஓடுவோம்
நடுக்க முடன் !
இருட்டினில் நாம்
ஒளிந்து கொள்வோம் !
அல்லது
அழகினைப் பின் தொடர்வோம்
அவமானப் படுத்த !
___________________

காதல் பாரம் உள்ளத்தை
அழுத்தும் போது
அறிவில் உயர்ந் தவரும்
சிரம் தாழ்த்துவர்.
அழகோ
மென்மை மிகுந்தது
லெபனானில் விளையாடும்
தென்றல் போல் !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *