ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 40

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல் வைத்தியர் தூங்கும் போது, மருந்துக் கடையை மூடிய பிறகு அது வலி கொடுக்க ஆரம்பித்தது !”
கலில் கிப்ரான் (Decayed Teeth)
___________________

காதல் தீப்பொறி
___________________

அந்தக் கணத்தில் தான்
வாழ்க்கையின் போதை ஊட்டம்
விழிப் புணர்வி லிருந்து
பிரிக்கிறது !
முதல் எழும் அத்தீப்பொறி தான்
இதய அரங்கில் பற்றி
ஏற்று கிறது ஒளி !
அதுதான்
முதல் மந்திரக் கீதமாய்
இதய வெள்ளி நாண்களில்
மீட்டுகிறது !
அந்தக் கணப் பொழுதில் தான்
ஆத்மாவின் முன்னே
கண்மலரும்
காலத்தின் அணிவகுப்புத் தடங்கள் !
கண்களுக் குள் காட்டும்
காரிருளின் காட்சிகளை,
மனச் சாட்சி யின்
வினைகளை !
அந்தக் கணம் தான்
திறந்திடும் எதிர் காலத்தின்
நிரந்தர ரகசியத்தை !
அவையே மன்மதன் —
காதல் தேவன் தூவிடும்
மோக வித்துக்கள் !
காதல் நிலத்தில் பயிரிட
விதைப்பவை
காதலியின் கண்கள்
அன்புப் பார்வையால் ! பலனை
அறுவடை செய்வது
ஆத்மா !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *