கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -பையன்நின்,
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத,
சீரான வாழ்வில் செலுத்து”….கிரேசி மோகன்….
”துவமேவ மாதா, துவமேவ பிதா,
துவமேவ பந்து, தவமும் -துவமேவ,
என்றிருப்பாய் என்றும் யதுகுலக் கன்றேபோல்
அன்றவன் கொள்வான் அணைத்து”….கிரேசி மோகன்….