மார்கழி மணாளன் 7  திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள்

0

க. பாலசுப்பிரமணியன்

திருநீர்மலையில் திருமால் நான்கு வகையாக தரிசனம் தருகின்றார்.-  அரங்கனாக (கிடத்தல்) நீர்வண்ணனாக (நிற்றல்) திருவிக்ரமனாக (நடத்தல்) யோகநரசிம்மராக (அமர்தல்) . இதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல்

271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

நீருண்ட மேகங்கள் சற்றே வான் நிற்கும்

நீர்வண்ணா! உன்னழகு பார்த்திருக்கும் !

வான்மேகத்தில் வளைந்த வில்லைப்போல்

பால்வண்ணா! பரம்பொருளே ! நின்னழகு.!

 

நின்றான் நீர்வண்ணன் நிலம் மீதில்

நிலையாகும் கண்கள் சிலை மீதில்

மலையான துயரங்களும் நீக்கிடுவான்

மலையாளும் மாலனே நீர்மலையில் !

 

அலைபாய் பாற்கடலின்  நல்லமுதே

கிடந்தாய் பாம்பணை  மேல் சாய்ந்து !

மலைத்தார் விண்ணவரும் அறிந்தார்

கிடந்தான் இடந்தான் என்றும் வைகுந்தமே !

 

இருப்பான் இவன் எங்கே எனக் கேட்டான்

இறுமாப்பில் தன்  நிலைதான் மறந்தான்

இருப்பேன் இங்கும் அங்கும் எங்குமென

இருந்தாய் அமர்ந்தாய் இறையாய் நரசிம்மா !

 

மூவுலகும் அளந்த மூத்தவனே மாதவனே !

மூன்றடியில் முடிமன்னன் காத்தவனே !

கிடந்தாலும் நடந்தாலும்  நீயே அளப்பாய் !

கடைக்கண்ணால்  காவியம் பல படைப்பாய் !

 

நின்றாலும் அமர்ந்தாலும் நடந்தாலும்

நீர்மலையில் நீ அழகாகக் கிடந்தாலும்

நான் வாழ நிழலேன்றும்  நீ எனக்கு !

நீலவண்ணா ! நின் நினைப்பே காப்பு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *