மார்கழி மணாளன் 8 ஒப்பிலியப்பன் கோயில்( (திருநாகேச்வரம்) திரு விண்ணகரப்பன்  

0

க. பாலசுப்பிரமணியன்

e0de2c95-7269-4d28-9ab0-4fd166896f38

தரணியில் தன்னொப்பாரில்லா அப்பனே !

துளசியின் தவத்தால் வந்த திருவுள்ளமே

திருவேங்கடத்தான் உருக்கொண்ட திருமாலே !

திருவிண்ணகரம் கண்டதிருநிறைவே! திருவருளே  !

 

மனம்கனிந்து மார்கண்டேயனக்கு மகள் தந்தாய்

மனமுவந்து இளம்பெண்ணை மணம் முடித்தாய்  !

உளமுவந்து உப்பில்லாப்பண்டம் உண்டாய் !

உப்பிலியப்பா !! உன்பாதம் நித்தியத் திருக்காப்பு !!

 

ஓங்கி உலகளந்த  உத்தமனே! தத்துவமே !

உருமாறி வாழ்ந்திருந்த பறவையையும்

ஓரிரவில் திருக்குளத்தில் உய்வித்தாயே !

உள்ளத்தின் இருளில் ஒளியாய் வந்திடுவாயே !

 

திருக்கண்கள் மறைத்து நீ நின்றாலும்

திருக்கண்ணா ! உன் பார்வை என் மீது !

திருக்கண்ணமுதின் சுவையாக நீயிருக்க

திருவிண்ணகரத்தானே ! திருத்தாள் காப்பு!

 

ஆயிரம் பெயர்கள் போற்றிட  உனக்குண்டு

அன்புடனே ஒருபெயர் சொல்லி அழைக்கின்றேன் !

ஆதிமூலத்திற்கு அருள்செய்த வேங்கடவா !

ஆனையென எனைநினைத்து அருள்வாயே !

 

ஊஞ்சலில் உனைவைத்து உப்பிலியப்பா, !

கொஞ்சிடவே மனம் நித்தம் வேண்டுதப்பா  !

சொல்லூஞ்சலில் உனைவைத்து ஆட்டுகின்றேன்

சுகமாக என் நெஞ்சில் நீ அமர்ந்திடுவாய்  !

 

உப்பில்லா உணவும் ஓர் சுவைதான்

உப்பிலியப்பா ! உன் அருட்சுவைதான் !

மூப்புற்று முழங்கால்கள் மடியும்முன்

முப்போதும் உனைக்காண வரம்  தருவாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *