ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 43

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் பல்லைப் பிடுங்கியது நல்லது.” என்றவர் கூறினார்,” மனித சமூகத்தில் எலும்பு வரைச் சீர்கெட்டுப் போன பல்வேறு சொத்தைப் பற்கள் உள்ளன ! அவற்றை அகற்றச் சமூகம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், தங்கத்தை இட்டு நிரப்புவதில் திருத்தி அடைந்து வருகிறது.
– கலில் கிப்ரான் (Decayed Teeth)

___________________

திருமணம்
___________________

இங்கே தான்
காதல்
வாழ்வின் அரிச்சுவடியை
எழுதத் துவங்கிறது !
இரவில் தோன்றிப்
பகலில்
பாடி வரும்
இசைக் கீத மாகவும்
புகழ்ப் பாமாலை யாகவும் !
நிகழ்வது இங்குதான் !
___________________

இதிலிருந்து தான்
காதல் தேவி
வாழ்வின் அரிச்சுவடியை
எழுதத் துவங்கிறாள் !
இரவில் தோன்றிப்
பகலில் பாடி வரும்
இசைக் கீத மாகவும்
புகழ்ப் பாமாலை யாகவும் !
நிகழ்வது இதிலிருந்து தான் !
இங்கிருந்து தான்
காதல் வேட்கை
முகத் திரையை நீக்கி விடும் !
இதயச் சந்துகளில்
விளக் கேற்றி
ஆத்மா வுக்கு நிகரற்ற
களிப்பை அளிக்கும் !
கடவுளைத் தழுவ வைக்கும்
அந்த இணைப்பு !
___________________

தெய்வீகப் பிறவிகள் இரண்டின்
ஐக்கிய உடன்பாடுதான்
திருமணம் !
மூன்றாவது பிறவி ஒன்று
வையத்தில்
தோன்றும் என்பதற்குச்
சான்றிதழ் !
ஆத்மாக்கள் இரண்டின்
கூட்டுறவு !
தனிமை போக்கிடும் திருமணம்
ஓர் உறுதிப் பிணைப்பு !
ஈர் ஆன்மாக்கள்,
ஏகாந்தப் பிறவிகள் கூடும்
உன்னத இயக்கம் !
தங்கத்தில் வடித்த வளையம்
சங்கிலில் !
ஆரம்பம் அதற்கு
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !
___________________

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *