வீதி முழுக்க
அடைத்துக் கிடக்க
ஒற்றை ஜன்னல்
மட்டும்
திறந்தே கிடக்கும்
வீட்டுக்குள்
யார்தான் இருப்பார்கள்?
என்றபடியே
பயந்து பயந்து
வீதியில் நடந்து
மழையில் நனைந்தும்
நனையாமலும்
சுற்றும் முற்றும்
பார்த்தபடி ஜன்னல்
அருகே சென்று
எட்டிப் பார்க்கும்
முன் கணமொன்றில்
ஏதேச்சையாக
என்வீட்டு ஜன்னலை
திரும்பிப் பார்த்தேன்…
எப்போதும்போல்
கன்னத்தில்
கைவைத்து
இந்த ஜன்னலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நான்…!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….