-கவிஜி 

வீதி முழுக்க
அடைத்துக் கிடக்க
ஒற்றை ஜன்னல்
மட்டும்
திறந்தே கிடக்கும்
வீட்டுக்குள்
யார்தான் இருப்பார்கள்?
என்றபடியே
பயந்து பயந்து
வீதியில் நடந்து
மழையில் நனைந்தும்
நனையாமலும்
சுற்றும் முற்றும்
பார்த்தபடி ஜன்னல்
அருகே சென்று
எட்டிப் பார்க்கும்
முன் கணமொன்றில்
ஏதேச்சையாக
என்வீட்டு ஜன்னலை
திரும்பிப் பார்த்தேன்…
எப்போதும்போல்
கன்னத்தில்
கைவைத்து
இந்த ஜன்னலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நான்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *