மார்கழி மணாளன்  18   திருநின்றவூர் –  பக்தவத்சலப் பெருமாள்

0

க. பாலசுப்பிரமணியன்

47a6a26e-3644-41a2-9986-08739acdfc47

வான்வீதி வலம் வந்த  வருணன் மகளும்

விண்வெளி போலொரு மண்வெளி கண்டாள் !

கண்விழியில் விண்வெளியைக் கொண்டவளே

மண்வெளியில் கண்விழியால் கோயில் படைத்தாள் !

 

திருநின்ற ஊரிலே வான் வந்த திருநின்றது

திருமகளின் மனம் நிறைந்த எழில் வந்தது !

திருமகளின் வழியே திருமாலின் மனம் வந்தது

திருமாலின் மனத்தோடு திருவருளும் வந்தது !

 

பார்த்தனுக்கே கீதை சொன்ன பக்தவத்சலன்

பாவம் அழிக்க பத்து வண்ணம் கண்டவன்

வில்லான் வராகன் வேதியன் யாதவன்

நாரணன் நரசிம்மன் நாமங்கள் ஆயிரம் !

 

நின்றவன் நிறையவன் நீலன் நிகரில்லான்

நிலமகள் அலைமகள் துணை கண்டான் !

வல்லான் நல்லான் வறுமையை அறுப்பான்

விடுகதை வாழ்விற்கு விடைகள் தருவான் !

 

அவலின் அன்பிற்குப் பொன்னைத் தந்தவன்

அனுமன் அன்பிற்குத் தன்னைத் தந்தவன்

அரக்கன் தம்பிக்கு அரியணை தந்தவன்

அடியவர் பக்திக்கு எதையும் தருபவன் !

 

குறைவின்றிப் பொருளெல்லாம் குவலயத்தில் வைத்தான்

குறைதேடும் மனம் மட்டும் கூட்டினில் வைத்தான்

கணநேரம் நினைப்போரிடமும் கருணை வைத்தான்

காதலித்த நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *