என்று காண்போம் இனி?!
தமிழண்ணலுக்கு இரங்கற்பா
முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com
நல்லோரும் வல்லோரும் நயமாகப் பாராட்ட
நலமாய் தமிழ்வளர்த்த நாயகனே – எல்லோரும்
பார்க்க ஏங்க விட்டாய் உம்மை
என்று காண்போம் இனி?
நெற்குப்பை பெற்றெடுத்த பூங்குன்றே எம்மைச்
சொற்குப்பை ஆக்கிவிட்டுச் சொர்க்கம் ஏகிவிட்டாய்
நன்றாய்த் தமிழ்வளர்த்த அண்ணலே உம்மை
என்று காண்போம் இனி?
மேலைச் சிவபுரியில் மேன்மைமிகு கல்வியினை
மேன்மை யுறச்செய் தாயே – மேலை
நாடெங் கும்தமிழ்ச் சேயைக் காத்தஉமை
என்று காண்போம் இனி?
தாலாட்டுத் தந்தாய் காதல் வாழ்வும்
தந்தாய் நன்னூல் உரைதனையே - பாராட்டத்
தந்து தண்டி யுரையும் தந்தஉமை
என்று காண்போம் இனி?