தமிழண்ணலுக்கு இரங்கற்பா

மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
Malar.sethu@gmail.com

நல்​லோரும் வல்​லோரும் நயமாகப் பாராட்ட
நலமாய் தமிழ்வளர்த்த நாயக​னே – எல்​லோரும்
பார்க்க ஏங்க விட்டாய்  உம்​மை
என்று காண்​போம் இனி?

​நெற்குப்​பை ​பெற்​றெடுத்த பூங்குன்​றே எம்​மைச்
​சொற்குப்​பை ஆக்கிவிட்டுச் ​சொர்க்கம் ஏகிவிட்டாய்
நன்றாய்த் தமிழ்வளர்த்த அண்ண​லே உம்​மை
என்று காண்​போம் இனி?

​மே​லைச் சிவபுரியில் ​மேன்​மைமிகு கல்வியி​னை
​மேன்​​மை யுறச்​செய் தா​யே – ​மே​லை
நா​டெங் கும்தமிழ்ச் ​சே​​யைக் காத்தஉ​மை
என்று காண்​போம் இனி?

தாலாட்டுத் தந்தாய் காதல் வாழ்வும்
தந்தாய் நன்னூல் உ​ரைத​னை​யே -​ பாராட்டத்
தந்து தண்டி யு​ரையும் தந்தஉ​​மை
என்று காண்​போம் இனி?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *