ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 48

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட மேலானக் கீத அரவத்தைக் கேட்பீர் !
கலில் கிப்ரான். (Decayed Teeth)
___________________

பூமியின் சீற்றம் !
___________________

நான் கண்டேன் இந்தப்
பராக்கிரம மனிதர்
கட்டி எழுப்புவதை !
தகர்க்க முடி யாத
கற் கோட்டைகள் !
நான் கண்டேன்
செம்மைக் கலை ஞர்கள்
தம் சுவர்கள் மீது
ஏராள மான ஓவியத்தைத்
தோரண மாய்
வரைந் திருப்பதை !
___________________

நான் கண்டேன் இந்தப்
பூமியை !
அகண்டத் தனது
தள வாயைத் திறந்து
அப்படியே விழுங்கும் சுளுவாய்
அத்தனைக்
கைத்திறன் வித்தகரை !
சிந்தனைச் சிற்பிகள்
விந்தையாய்ச்
செதுக்கி வைத்ததை !
___________________

நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
எழிலைப் பெருக்கு வதற்கு
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *