-வேதா. இலங்காதிலகம்

வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
உள்ளம் வெதும்பத் துன்பச் சாதனை
வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.                      flood

தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.

அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
வென்றது வெள்ளம் காலு கங்கையால்
தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்.

தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
தேவதூதர்களாய்  தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *