கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!
30.12.2015 புதன்கிழமை பிற்பகல் 1330 மணி
சாவகச்சேரி, ஒல்லாந்தர் வீதி, ஐங்கரன் மண்டபம்.
தென்மராட்சிக் கலாச்சாரப் பேரவை, தென்மராட்சிப் பிரதேச சபை இணைந்து வழங்கிய பண்பாட்டுப் பெருவிழா.
தலைவர் பிரதேசச் செயலர், அஞ்சலிதேவி சாந்தசீலன்.
முதன்மை விருந்தினர் செ. சீனிவாசன், தலைவர் கூட்டுறவு ஊழியர் ஆணக்குழு.
தென்பொழில் மலர் வெளியீடு
கலைச் சாகரம் (கலைக் கடல்) விருதுகள் ஐவருக்கு வழங்கல்.
இலக்கியத்துக்கான விருது எனக்கு. யசோதரா (நடனம்), செல்லத்துரை (ஆர்மோனியம்), மாதுசிரோன்மணி (இசை), தங்கவேலு (நாதசுவரம்)
வித்தகனே வாழிய நீ !
( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா)
எண்ணம் எலாம் தமிழாகி இலக்கியத்துள் இணைந்து நின்று
மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்வதற்கு வழி சமைக்கும்
சச்சியெனும் பெரியோனே தகையுடை விருது பெற்றாய்
இச்சையுடன் வாழ்த்துகின்றேன் எஞ்ஞான்றும் வாழியநீ !
தமிழோடு சைவத்தை தலைநிமிரச் செய்வதற்கு
தலையாய பணியாற்றும் சச்சியெனும் பெரியோனே
நிலையான கீர்த்தியுடன் நீயென்றும் நிலைத்து நிற்க
விலையாகப் பலகொடுக்கும் வித்தகனே வாழியநீ !