-கவிஜி

வா…வந்து
தேநீர் போடு…
மதிய மழை வரட்டும்…

***

என்றாவது திறக்கப்படும்
ஜன்னலில் திறக்காமலே
கிடக்கின்றன கைகள்…

***

ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
ரொட்டித் துண்டு
பெரிதென்கிறது…

***

எறும்புகளைக்
கொண்டாடுகிறது
வரிசை…

***

முதலில் இளையராஜாவின்
பாடலைச் சொல்…
பின், காதலை சொல்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *