ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 49

0

–சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

 

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் நாங்கள் தேடிக் கொண்டி ருக்கிறோம்” என்று.
கலில் கிப்ரான். (Decayed Teeth)
___________________

எனக்கில்லை முற்றுப் புள்ளி !
___________________

நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
இயற்கை எழிலைப் பெருக்க
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !
___________________

குன்றுகளில் மின்னும்
விலைமதிப் பற்ற கற்களும்
கடற்கரை களில்
காணப்படும் பொன் மணலும்,
பரந்த நிலத்தில் தெரியும்
பச்சைப் புல்வெளிகளும்
போதும் என்று கூறுவது
பூமிக்குத் திருப்தி !
___________________

என்றாலும் பூமியின்
சீற்றத்தை
எள்ளி நகையாடி
பேரழிவுக்கும்,
பெருஞ் சினத்துக்கும்
இடையே
தெரியுது எனக்கு :
எதிர்த்துக் கொண்டு
மனிதன் தனது
தெய்வீகச் சக்தியில்
நிற்பது !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *