-மலர் சபா

மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை  

பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்

யமுனைத் துறையில்
கண்ணனுடன் விளையாடும் பின்னையின்
அழகையும் நிறத்தையும்
இனி நாம் பாடுவோம். 

மிகவும் மென்மையான இடை                     krishna radha
ஒடிந்து போகுமோ எனக்
காண்பவர் எண்ணும் வண்ணம்
இடை அசைய நடந்து வருபவளின்
ஆடையை ஒளித்து வைத்த
கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா!  

அல்லது… 

அவள் ஆடையை ஒளித்துவைத்து
ஆடையின்றி இருக்கும் அவளைக்
கண்டு மயங்கும் கண்ணனைக் கண்டு
தானும் மயங்கி நிற்கும் அவள் அழகிய
மென்சாயல் முகத்தைக் கொண்ட
பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

ஆற்றில் விளையாடும்போது
வஞ்சித்துப் பின்னையின் ஆடை கவர்ந்த
கண்ணன் அவன் உள்ளம் கவர்ந்த
பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

அல்லது… 

அங்ஙனம் தன் உள்ளம் கவர்ந்தவளின்
அழகையும் வளையல்களையும்
ஒன்றாகக் கவர்ந்து நின்ற
கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

ஆடையையும் வளையலையும் இழந்து
நாணம் மிகுந்து தன் கையால்
முகத்தை மறைத்துக் கொண்ட
அவள் முகத்தின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

அல்லது… 

அவள் கைகளால் முகத்தை மறைத்து நின்ற
அழகில் மயங்கிக் காதலுற்று உழன்ற
கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி: கூகுள்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *