’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது
‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….
————————————————-
‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
அங்கையேந்தும் அவதார விஷ்ணு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
வானவைகுந்தனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
உடல்சுமந்த ஆமையே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
தூணாடும் துரைசிங்கனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
அந்தணன் வாமனனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
நாமமொன்று நடிப்புவேறு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
கோபாலக் கண்ணனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)

———————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *