மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

ஒன்றன் பகுதி

am

கட்டவிழ்ந்த மலர்களால் ஆன மாலையைத்
தன் கூந்தலில் அணிந்த நப்பின்னை,
கதிரவனைத் தன் சக்கரத்தால் மறைத்த
கடல் போன்ற வண்ணம் கொண்ட
கண்ணனுக்கு இடதுபுறமாகவும்,
திங்கள் போன்ற வெண்ணிற மேனியான்
கண்ணன் தமையன்
பலராமனுக்கு வலதுபுறமாகவும் நின்றாள்.

அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
புறமிருந்து காத்து நிற்பவர்,
மறைப்பொருளை ஆராய்ச்சி செய்தவரும்
அதனை நன்கு உணர்ந்தவருமான
நாரதர் ஆவார்.

சிறுபுறக் கழுத்தாகிய
பிடரை வளைத்து நிற்கும் நப்பின்னை,
ஆண்மயிலின் புறக்கழுத்தை ஒத்த
நீல நிறமுடைய கண்ணனுக்கு வலதுபுறமாகவும்,
வெண்ணிற மலர்கள் ஒத்த மேனியுடைய
கண்ணன் தமையன்
பலராமனுக்கு இடதுபுறமாகவும் நின்றாள்.

அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப்
புறமிருந்து காப்பவர்
குயிலுவருள் சிறந்தவரும்
பண்ணோடு இயைந்த தாளத்துக்கு ஏற்ப
யாழிசை மீட்டுகின்ற
நாரதர் ஆவார்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி:
கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *