கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
புத்தபரி சுத்தனவர், பாம்பில் படுத்தது,
நித்திய சூரிகள்நி மித்தமாய், -இத்தரையில்
தர்மம் தழைக்க தசாவதாரம் செய்பவர்:
கர்மம் அவரதுகொள் கை …கிரேசி மோகன்….
அடியேன் கோயிலுக்குப் போவதில்லை….
நாத்திகனும் இல்லை…. காலைக் கடன் எனக்கு
பூசலா நாயனார் போல கேசவ்லா
நாயனார் கண்ணனை வெண்பா வழி
வழுத்துதலே பூசை….
”BUDHA NILKANTH JALA NARAAYANAN”
———————————————————————
’’நேபாள நீர்மிதக்கும், நாரா யணாவந்தீர்,
பூபாரம் போக்கிடப் பத்தாக: -பூபாள
வேளை வருகின்றீர் , வெண்பா வடிவத்தில்,
காலைக் கடன்நீரே காப்பு’’….கிரேசி மோகன்….