கடவுளின் அகல விரிந்த கைகள்…..

0

–கவிஜி.

 

 

புத்தனிடம் பேச
எதுவுமில்லாத யசோதரையிடம்
பேச நிறைய இருக்கிறது…
________________________________________________

உலகின் முதல் கதையும்
கடைசி கதையும்
‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…
________________________________________________

கைகளை எவ்வளவு
அகலமாக விரிக்க
முடிகிறதோ
அவ்வளவுதான் வானம்
குழந்தைக்கு….
________________________________________________

பூவைச் சூடிக்
கொண்ட தோட்டம் என
உன் கல்லறை…
________________________________________________

உங்கள் வீட்டுப் பூனைகளிடம்
கேட்டு விடாத கேள்விகளில்
எங்கள் வீட்டு அடுப்பு
கடைசியாய்
எரிகிறது…
________________________________________________

கவிஜி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *