வெண்பாகவதம்……(பாகவத்தை வெண்பா வடிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
மூலம் -நாராயண பட்டத்திரியின் ஸ்ரீமத் நாராயணீயம்….)
———————————–
பாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும்
கண்ணனின் கற்பனையே….!
—————————————————-

பாக வதப்பழமது ஏகருசி ஆனது
தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
மேனியன் லீலையை முன்னமே உண்டதனை
ஞானி அவர்ரசித்த நூல்….
———————————————————-
சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….

புதைபா கவத விதைநா ரணனாம்
அதன்வேர் பிரமன் அடிநா -ரதனாம்
முனிவியாசன் அம்மரம் மூண்ட கிளைகள்
கனிவாசு தேவன் கதை…

d1363546-a941-4176-8b18-5cbbd0d76f84
மச்சாவதாரம்
——————

கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
தாகமென்ன கேட்டான் திகைத்து….

ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
மச்சா வதாரத்து மீன்….

மனவா சுகியால் மனித கலத்தை
வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
குருவின் மகிமை கருத்து….

 
வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
தூக்கிச்சென் றான்வேதத் தை….

தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்,
தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ராஜசம்,
தாங்குமீன் சத்வம் துணை….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *