கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நீல யமுனையில் நீந்திய கோபியர்
சேலைப் புதையலை சேகரித்தோய் -நாளை
சபையில் துரோபதை சோகம் களைந்து
அபயம் அளிக்கத்தா னே….
நிறத்துக்கு நீலம் நினைப்புக்கு லீலை
கருத்துக்கு கொள்மனமே கீதை -சிரத்துக்குள்
சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
ணீர்மல்க ஆன்மாவா கும்….
நீலம் அரவணைக்க நிர்மூலம் ஆகிடும்
காலம் இடம்பொருள் ஏவல்கள் -கோல
விடமுறங்கி ஆலில் விளையாடும் பிள்ளை
உடனிருக்க உற்சாக ஊற்று….கிரேசி மோகன்….