613c3c92-5534-4085-b5a2-bcd30a1b456e

‘’பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’ என்ற
மகாகவி பாரதியாரின் வரிகளால் வந்த வெண்பா….

’’பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும்
மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை,
சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே
வங்கக் கடல்கடைந்தோய் வா’’….கிரேசி மோகன்….

’’பாம்பாட்டி, நச்சரவ பேய்ச்சி யிருமுலைக்
காம்பாட்டி, அன்னையால் கட்டுண்டு, -தாம்பாட்டி,
*கூனாட்டி மங்கைக்கு, தூணாட்டி பிள்ளைக்கு,
காணாட்டி கேசவ்கை காண்’’….கிரேசி மோகன்….

*-மதுராபுரி சென்றதும் கண்ணன் செய்த முதல் காரியம் ஒரு மங்கையின் கூனை நிமிர்த்தியது….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *