ஊர்கூடி வந்து ஒன்றாகச் சேர்ந்து
தேரிழுக்கும் போது தெரியாது சாதி
மதமென்னும் பாப மதவெறியும் அங்கே
முதலான தெய்வம் முகமூடி இன்றி
அருள்கொண்டு கொட்ட அள்ளிடுவர் பக்தர்!
இருள்நீங்கி உள்ளே ஏகாந்த வெளியில்
சுகமாக இருந்து சூழ்நிலையை மறப்பர்!
இகவாழ்வில் கிட்டும் இந்தவோர் இன்பம்
தேரோட்ட நாளில் தெருவிலே மக்கள்
சீரோடு என்வீட்டு திருவாசல் முன்னம்
சிலநொடிகள் நின்று சென்றிடும் நேரம்
பலஜென்ம பாபம் பறந்தோடிப் போகும்!
நகரத்தில் கிராமத்தில் நடக்கின்ற
சிகரமாம் திருவிழா தேரோட்டந் தானே!
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.