-மீ.விசுவநாதன்

பம்பரம் விட்டேன் தெருவினிலே – சிறு
பாப்பா வான நிலையினிலே!
அம்பலத் தெய்வச் சிலையதுபோல் – அது
அங்கே நின்று சுழன்றதுவே!

என்பலம் மொத்தம் கயிற்றினிலே – வைத்து
இழுத்து விட்டேன் சுற்றிடவே!
தன்பலம் மட்டும் ஆடியபின் – அது
தரையில் மெல்லப் படுத்ததுவே!

ஆடிய நேரம் அனைவருக்கும் – மன
அமைதி தந்து இருந்ததுவே!
தேடிய இன்பம் அடைந்தவுடன் – தான்
தெளிந்தே ஆட்டம் நிறுத்தியதே!

மானிட னெனக்கு அதன்நுட்பம் – ஒரு
மௌன நிலையில் புரிந்ததுவே!
ஊனிட முள்ள உறவெல்லம் – உள்
உயிர்தான் மறைய விலகிடுமே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *