-மலர் சபா

மதுரைக் காண்டம் – 08: துன்ப மாலை 

ஆய மகளிருடன் மாதரி நீராடப் போவதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து விரைந்து வருவதும் 

குரவைக் கூத்து முடிந்தவுடன்
ஆயர் குலத்தவள் முதுமகள் மாதரி
தளர்ந்த நடையுடன்
மலரும் புகையும் புனையும் சாந்தும் பூமாலையும்
எடுத்துக் கொண்டு
இடையறாது ஒழுகும் நீரையுடைய                            kaNNagi
வைகை ஆற்றின் கரையில் எழுந்தருளியுள்ள
திருமாலை வழிபடுவதற்காக
வைகைத் துறைக்குச் சென்றாள்.

அப்போது பெண்ணொருத்தி
மதுரையில் நடந்த
ஓர் அவலச் செய்தி கேட்டு
அதை உரைக்க வந்தாள்.

கொலைச்செய்தி அறிந்து வந்த ஆயமகள் பேசாது நிற்க, கண்ணகி அவளை நோக்கி ஐயமுற்றுப் பேசுதல் 

அங்ஙனம் ஓடிவந்த அவள்,
கண்ணகியைக் கண்டதும்
சொல்ல வந்ததைச் சொல்ல வார்த்தையின்றிப்
பேசாமல் நின்றாள்.

அதைக் கண்ட கண்ணகி
அவளிடம் கூறலானாள்.
ஓ தோழி!
நகருக்குள் சென்ற என் கணவனை
இன்னும் காண முடியாமல் இருக்கிறேன்;|
எனவே என் உள்ளம் பெரிதும் கலங்குகிறது.

கொல்லன் உலையில் ஊதுகின்ற தீயைவிடத்
தகிக்கின்றது என் நெஞ்சம்;
இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
உடனே கூறுவாயாக!

ஓ தோழி!
நல்ல பகல்பொழுதுதான் என்றாலும்
என் காதலனைக் காணாமல்
என் நெஞ்சம் நடுங்குகிறது.
உள்ளம் கலங்குகிறது.
உடலும் நடுங்குகிறது.
இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
உடனே கூறுவாயாக!

ஓ தோழி!
என் தலைவன் வரக் காண்கிலேன்;
எனவே அடைக்கலமின்றி நிற்கிறேன்;
நீங்கள் அனைவரும் உள்ளே ஏதோவைத்து
உண்மையை மறைத்து வஞ்சகமாகப் பேசுவதால்
என் நெஞ்சம் கலங்குகிறது.

இங்ஙனம் என் மனம் கலங்குவதால்
விளைவு எங்ஙனம் இருக்குமோ!
இத்தகைய துன்பத்தில் நான் வருந்துவதால்
உனக்குப் பிறர் கூறிய செய்தி என்னவென்று
உடனே கூறுவாயாக!

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *