நீண்ட தூரப் பயணமதில் நின்று போகப் பொழுதிலை! கூண்டில் சிக்கித் தவித்திடாத குஷிக்கு ஈடு இணையிலை! குடும்ப மாக உறவுடனே கொண்ட உணவில் குறையிலை! கொடும்ப கைமை எதுவுமின்றிக் குறித்த வாழ்வில் பழுதிலை!
விரிந்த வான வெளிப்பரப்பில் விதவித வண்ணப் பறவைகள் தெரிந்த திசையில்கவனமுடன் தினந்தினம் செல்லும் அழகிலே மறந்து நிற்பேன் எனையிழந்து மனிதன் அதுபோல் பழகினால் சிறந்து வாழ முடியுமென சிந்தித் திருப்பேன் தனியிலே!
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.