மீ.விசுவநாதன்

வண்ணத்துப் பூச்சி பறக்கிறது -அது
வகைவகைப் பூவை ரசிக்கிறது!
மண்ணுக்குள் போகும் பொழுதுக்குள் -உள்ள  Butterfly
மலரெலாம் தொட்டு மகிழ்கிறது! 

மகரந்தப் பொடியின் அழைப்பினிலே -அது
மயங்கியே மலரில் அமர்கிறது!
சிகரங்கள் தொட்ட மரத்தினிலும் – தான்
விரும்பிய பூவில் கலக்கிறது! 

தானும்நற் தேனைச் சுவைக்கிறது – அதன்
தயவிலே பூகா யாகிறது!
ஏனோதா னென்று திரியாமல் – ஒரு
இலட்சியங் கொண்டே வாழ்கிறது! 

ஈசனது படைப்பின் அவசியத்தை – என்
சின்னதாம் அறிவும் அறிவதற்கு
நேசமுடன் வந்து தினந்தோறும் -என்
நெற்றியின் மீதும் அமர்கிறது!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *