448b8fb7-d063-47c3-b67b-09b830da6dbc

 

”குந்தி மகனேகாண், வந்துவிட்டார் வானத்தில்,
மந்திமகன் மாவீரன் மாருதி, -சந்திப்பாய்,
வெற்றியை சத்தியம் வேர்த்தலை விட்டொழித்து
பற்றுவை பற்றின்றி போர்”….கிரேசி மோகன்….

”இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
பாதமதைப் போரில் பதி”….

”தீண்டும் இயற்கையின் தூண்டுதலால் வந்துபோகும்
யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
புகழாம் போரில் புகு”….

”கொல்வோன் எனவும் கொலையுண் டோனெனவும்
சொல்வோர் இருவரும் மூடராம் -உள்ளான்மா
கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
வெல்வதுன் வேள்விவிஜ யா”….

”வியப்பென பார்த்து, வியப்பென கூறி
வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
எவருக்கும் எட்டா எழில்”….

”வாழையடி வாழையாய் வீரமுற்ற வாரிசுனை
கோழையென இவ்வுலகோர் கூறிடுவர் -தோழனே
சாதலினும் தீதன்றோ சூழும் அவமானம்
ஊதிடு சங்கை உரத்து”….கிரேசி மோகன்….

ஸ்ரீ பகவான் உவாச:
—————————————

“அஞ்சனை சேயிருக்க அஞ்சுவதேன் அர்ஜுனா
அஞ்சாளும் நூறை அழித்தபின்: -அஞ்சுதல்
அஞ்சாமை ஆணவம், ஆதலால் பாரதப்
பஞ்சா மிருதம் புசி’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *