க. பாலசுப்பிரமணியன்

nhetynr copy

நீரோடு நிலமும் வானும் நல்காற்றும்

கதிரும் மதியும் காலத்தில் மழையும்

கனியும் காயும் கண்நிறை பசுமையும்

களிப்புடன் தருவாய் துர்முகியே !

 

ஊர்கூடி ஒன்றாய் உலகினில் வாழ்ந்திட

தேன்கூடாய் உழைப்பின் பலன் சேர்ந்திட

நாகூடும் சொல்லென்றும் நலமாய் வந்திட

நாளெல்லாம் அருள்வாய் துர்முகியே !

 

தாயோடு சேயும் தந்தையும் உறவும்

தரணி போற்றும் கூட்டுக் குடும்பம்

ஊனோடு சதையும் உதிரம் போல்

ஒன்றாக உறவாட அருள்வாயே !

 

நான்முகனும் அறுமுகனும் களி முகத்தொடு

ஆனைமுகன் அப்பனுடன்  அன்னை  சக்தியோடு

வேறுமுகம் காட்டாது துர்முகியே ! நல்மனத்தோடு

நேர்முகமாய் காத்திடவே அருள்வாயே !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *