rkuaf_273514
——————————————
தீதண்டும் நேரத்தில் கோதண்டம் கொள்வோனை
வா!தெண்ட னிட்டின்று வாழ்த்துவோம் -தூதன்தன்
தோளிருந்து ராவணணை துண்டித்த ராகவனின்
தாளிரெண்டைக் கொள்வோம் துணை….(1)

கவிமழை கம்பன் உவமையில் கண்ட
நவமிக்கு நாயகன் நாளை -அவனிக்கு
வந்த தினத்தில் வணங்கித் துதித்திட
முந்தை வினைக்கு முழுக்கு….(2)

சொல்லொன்று, இல்லொன்று, வில்லம்பு ஒன்றென்று,
செல்லென்றும் பெற்றோர்கள் சொன்னபடி -முள்ளென்றும்
கல்லென்றும் பாராமல் கானில் நடந்தவனை
உள்ளொன்றிப் பின்தொடர்ந்து உய்….(3)….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *