திருமால் திருப்புகழ்….
——————————————–

d2d26802-db1b-4e49-946f-44d1c6873066
தனனதந்த தனனதான
தனனதந்த தனனதான -தந்ததான….
——————————————————————————————————————

“குறஅணங்கை மருவவேலர்
உதவவந்த, உமைமகேசர் -கொஞ்சுவேழம்
சுடர்மிகுந்த சுதர்சனாரை
வயிறுகந்த பொழுதில்காதி -ரெண்டின்மேலும்(பெருமாள் தோப்புக்கரணம் போட்டது)

கரமழுந்தி படியமேனி
அமர்ந்தெழுந்து தொழுதுநேமி -கொண்டமாலை
விடியல்கங்குல் மதியம்மாலை
தொழுதுநின்று துயரிலாது -இங்குவாழ்க:

சிறுவனென்று வெகுளிமாமன்
இடமிருந்து விரையு(ம்)ஆனை(குவலயாபீடம்) -கொம்புசீவி
துடையகன்ற வலியசாணு(கம்சசாணூர மர்த்தனம்)
ரனைமலங்க தரையில்சாய -த்வந்தமாடி(திண்தோள் மணிவண்ணன்)

பிறவிதந்த உறவுமீள(வசுதேவர் தேவகியை விடுவித்தது)
சிறைபுகுந்து தளைகள்வீழ -கஞ்சனாளும்(கம்சனாளும்)
மனைபுகுந்து அசுரமாமன்
சபைநடுங்க முடிவுகாணும் -எம்பிரானே”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *