கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அற்புதம் கேசவ்….ரமண முனியும் தங்களது வேங்கட ரமணக் கனியும் இணைத்துப் பார்க்க வைத்தது இந்த ஓவியம்….கண்ணனுக்கு செல்லப் பசு ‘’கங்கி’’ (டோங்க்ரே மகராஜ் பாகவதம் படித்து அறிந்தது) என்றால் ‘’ரமண முனிக்கு’’ செல்லப் பசு ‘’லஷ்மி’’….தனது ‘’ஆயிக்கு’’(அம்மா அழகம்மை) மோட்சம் அளித்து கோயில் கட்டிய ரமண முனி, தனது செல்லப்பசு ‘’லஷ்மி’’க்கும் மோட்சம் அளித்து கோயில் கட்டினார்….கண்ணனோ ஒருபடி மேலே போய் தங்கள் மூலமாக ‘’கங்கி’’க்கு தினமும் மோட்சம் அளிக்கிறார்….அகந்தை மனமாம் ஆனை(நானை)யை அடக்கியவர் ஸ்ரீ ரமணர்….கம்சனின் குவலயாபீடம் என்ற ஆனையை அடக்கியவர் ஸ்ரீ கண்ணபிரான்….அந்த பெட்டர் நான் பட்டர் கண்ணனின்றி வேறு எது….’’அஹம் பிரும்மாஸ்மி’’….I AM THAT I AM….இப்படி விதவிதமாக யோசிக்க வைக்கிறது தங்களின் ஓவியம்….வெண்பாவுக்கு வருவோம்….
‘’ஆவுக்(கு) ஒருகோயில், ஆயிக்க்(கு) ஒருகோயில்,
சாவுக்கு மட்டும் சமாதிதந்த, -மாவுத்தன்,
ஆனை மனமடக்கு சோணை ரமண(ர்)அறி(அரி என்றும் கொள்ளலாம்)
நானைப் படைத்(து)உமிழும் நந்து(செல்லமாக நந்தகுமாரனை)….கிரேசி மோகன்….
சமாதி -பிரம்ம நிலை மோட்சம்….