கண்ணன் என் அன்னை…
———————————————

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்….
———————————————————-

2a453a49-e705-461a-a2c7-30ff324e112e
பள்ளிதனைக் கொண்டதால், பிள்ளை பெறுவதால்,
வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்
கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்
நேர்நிகர் ஆவார் நமக்கு….

மாதவன் கேசவன் மாலவன் மோகினி
மா(து)அவன் சபரீசன் மாதாவாம் -ஆதலால்
அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
தன்னையே கன்னையன் தந்து….
‘’பார்த்தனின் சாரதி பார்த்தன் பரிதவிக்க,
கீர்த்தனை செய்தனன் கீதையை, -தீர்த்தம்
திருவல்லிக் கேணி திகழ்பெரிய தெய்வம்
திருத்துழாய்க் கண்ணனே தாய்’’….
——————————————————————————-

சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
சுதர்ஸனம் காக்கும் சுழன்று….
திருப்பாற்க் கடலில் திருவனந்தப் பாய்மேல்
விருப்பாய்க் கிடக்கும் வரமே -திருத்துழாய்
பூண்டெங்கள் ஸ்ரீவில்லிப் புத்தூர் பெரியாழ்வார்
ஆண்டாள் மணந்தோய் அருள்….

திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *