அட்சயமே….அட்சயமே….!!
க. பாலசுப்பிரமணியன்
போதுமென்ற மனமிருந்தால்
பொழுதெல்லாம் அட்சயமே..!
புன்சிரிப்பு புலர்ந்திருந்தால்
போகுமிடமெல்லாம் அட்சயமே !!
கண்ணிரண்டும் கருணைவளையம்
அணிந்திருந்தால் அட்சயமே !
காப்பியங்கள் காதணியாய்
காதருகில் கிசுகிசுக்க
காலமெல்லாம் அட்சயமே !
கசடுபடா குரலிருந்து
முத்தான பாடல்கள்
முணுமுணுக்க முழங்கிவிட
முப்பொழுதும் அட்சயமே…!
கைகளிரண்டும் வலிமையுடன்
கடமைகள் செய்திருக்க
கங்கணமாய் பண்பிருந்தால்
காலமெல்லாம் அட்சயமே…!!
பசித்தவயிற்றை பக்கம்வைத்து
பருப்போடு சோறுகலந்து
பசியாறப் பார்க்கையிலே
பார்வைகொள்ளும் சுகமென்றும்
அட்சயமே… ..அட்சயமே. !!
அருமை தங்கள் கவி அர்சர லஷம் பெறும் அட்சயமே….கிரேசி மோகன்
அன்புடைய திரு கிரேசி மோகன் அவர்களுக்கு,
தங்கள் பாராட்டுதலுக்கு உளமார்ந்த நன்றி..
அன்பன்
க. பாலசுப்ரமணியன்