ரா.பார்த்தசாரதி

 

உண்மை உறவுகள் கிடைப்பது அறிதன்றோ !

கிடைத்திட்ட உறவினை இழப்பது கொடிதன்றோ

 

நிழலுக்கு ஒரு போதும் மதிப்புண்டோ

நிஜமில்லா உறவுகள் என்றும் நிரந்தரமுண்டோ !

 

சொல்லும், பேச்சும் என்றும் சொந்தமில்லை

வில்லற்ற அம்பு எய்யப்படுவதில்லை !
பொய்மைக்கு என்றும் புகழிடம் இல்லை

பொறுப்பில்லா பிள்ளைக்கு என்றும் வாழ்க்கையில்லை !
பொறுமையோடு இருப்பவனுக்கு என்றும் தொல்லை இல்லை

செல்வத்துடன் வாழ்பவனுக்கு இரக்கம் என்பதில்லை!
வெகுளியாய் திரிபவனுக்கு வாழ்வில் வளமில்லை

வளமோடு வாழ்ந்திட தகுதியான மனிதன் கிடைப்பதில்லை!
தோல்வி ஒன்றே சந்தித்தவன் என்றும் சோர்வதில்லை

வெற்றி கண்டவன் தலைகனத்தால் அழிவு உண்டாகாமலில்லை !

 

சொல்லொன்றும் செயலொன்றும் என வாழ்வது,

பிறர்சொல் படாமல் மடிவது பெரிது !

 

பிறர் மனம் நோகாமல் வாழ்க்கை நடத்துவது நல்லது

பிறர் வளம் செழிக்க பாடுபடுவதே நல்லது !
பின் நாளில் எந்நாளும் பொன்னாக மாறிடுமே

உந்தன் வாழ்வும் சீரும், சிறப்புடன் இருந்திடுமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *