பொன்னான வாழ்வு
ரா.பார்த்தசாரதி
உண்மை உறவுகள் கிடைப்பது அறிதன்றோ !
கிடைத்திட்ட உறவினை இழப்பது கொடிதன்றோ
நிழலுக்கு ஒரு போதும் மதிப்புண்டோ
நிஜமில்லா உறவுகள் என்றும் நிரந்தரமுண்டோ !
சொல்லும், பேச்சும் என்றும் சொந்தமில்லை
வில்லற்ற அம்பு எய்யப்படுவதில்லை !
பொய்மைக்கு என்றும் புகழிடம் இல்லை
பொறுப்பில்லா பிள்ளைக்கு என்றும் வாழ்க்கையில்லை !
பொறுமையோடு இருப்பவனுக்கு என்றும் தொல்லை இல்லை
செல்வத்துடன் வாழ்பவனுக்கு இரக்கம் என்பதில்லை!
வெகுளியாய் திரிபவனுக்கு வாழ்வில் வளமில்லை
வளமோடு வாழ்ந்திட தகுதியான மனிதன் கிடைப்பதில்லை!
தோல்வி ஒன்றே சந்தித்தவன் என்றும் சோர்வதில்லை
வெற்றி கண்டவன் தலைகனத்தால் அழிவு உண்டாகாமலில்லை !
சொல்லொன்றும் செயலொன்றும் என வாழ்வது,
பிறர்சொல் படாமல் மடிவது பெரிது !
பிறர் மனம் நோகாமல் வாழ்க்கை நடத்துவது நல்லது
பிறர் வளம் செழிக்க பாடுபடுவதே நல்லது !
பின் நாளில் எந்நாளும் பொன்னாக மாறிடுமே
உந்தன் வாழ்வும் சீரும், சிறப்புடன் இருந்திடுமே !