-மலர் சபா

மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை

ஒளிவீசும் அழகிய அணிகலன்கள் அணிந்தவர்கள்
கண்ணாடியும் கலன்களும் ஏந்தியவர்கள்
புதிய நூலாடை, பட்டாடை ஏந்தியவர்கள்
கொழுவிய வெள்ளிலைச் செப்புகளை ஏந்தியவர்கள்
வண்ணப்பொடிகள் சுண்ணம்
கத்தூரிக் குழம்பினை ஏந்தியவர்கள் queen
மாலைகள் கவரிகள்
அகிற்புகைகள் தாங்கியவர்கள்
கூனர் குறளர் ஊமர்
இங்ஙனம் கூடிய
குற்றவேல் புரியும் மகளிர் புடைசூழ
நரை கலந்த கூந்தலுடைய முதுமகளிர்
இவர்கள் அனைவரும்
உலகம் காக்கும் பாண்டிய மன்னன் தேவி
நீடூழி வாழ்க எனப்
புகழ்மொழிகளால்  வாழ்த்தி நிற்க…

சேவை புரியும் மகளிரும்
காவல் புரியும் மகளிரும்
அடிதோறும் வாழ்த்தி நிற்க…

பாண்டியன் பெருந்தேவி சென்றனள்
தம் தீக்கனாத் திறனை
அரசனிடம் எடுத்துரைக்க…

***

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *