b27f401c-669f-4c16-907d-4a04b9629396

”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்
கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
புருடனைப் போற்றல் பிழைப்பு’’….(1)

”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
நொடிக்கணக்கில் வந்தகால நேமி! -வடிவெடுத்து,
ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
ஆவன செய்யவா தேவு’’….(2)

காலநேமி -சுதர்ஸன சக்கிரத்தான்….

”பீதாம் பர(ம்)அவிழ, போட்ட நகைசிதற,
வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி
கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய
நேசனக் கேசவனை நம்பு’’….(3)
’’கூப்பிட்டால் ஆயர்க்காய்க், கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்,
சாப்பிட்டால் நட்புக்காய்ச், சோர்வின்றிக் -காப்பிட்ட
ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
ஆதரவுக்(கு) ஓடும் அரி’’…(4)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. dear sir,

    well wishes to you

    looking more & more from you on திருமால் திருப்புகழ், 

    wishing you & your family  all good health & happiness forever

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *