கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கண்ணன் நம்மோடு ஆன்மீகமாய்க் கலந்தாலும்
நாம் கன்றைப் போல லெளகீகமாய் கால் வருடி
வரம் கேட்போம்…..இதுதான் ‘’அடி’’மாட்டு புத்தியோ! கேசவ்….!
ஆண்டவனே வந்து அணைத்தாலும், நாம் வேண்டுவது கார், பங்களா
’’பாதாங்’’கீர் போன்ற இக இச்சைகள்….
”ஒன்றோடு சேர்ந்து ஒன்றாய்க் கலந்தாலும்,
கன்(று)ஆயர் ஏறைக்(கண்ணன்) கலக்காது: -கன்றுக்(கு)
அடிமாட்டு புத்தி மடிப்பிச்சைக் காக
குடித்திடும் கால்பாதாங் கீர்’’….கிரேசி மோகன்….