கிரேசி மோகன்

 

வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
ஓரான்மா தானுன் உறவு….(31)

உறவுக்குத் தேவை உருவும் திருவும்
கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)

கற்பூர வாசனை கழுதை அறியுமா
விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)

அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
பதவி வரப்போடும் பூட்டு….(34)
பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
வேண்டாமை வேண்டல் விதி….(35)

விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *