“சுடலையாண்டி”

(மீ.விசுவநாதன்)

85c7d796-3fc1-401d-a968-72a117dfce6e

ஊருக்கு வெளியிலே சுடலை – அங்கு
உயிரோடு வாழ்கிறா(ன்) ஒருவன்
நீராலே ஆனதாம் உடலை – விழி
நெருப்பிட்டுப் பொசுக்குறா(ன்) ஒருவன் !

வீபூதிச் சாம்பலால் அழகை – ஒளி
விளக்காகச் செய்கிறா(ன்) ஒருவன்
மேதாவி பாமரன் வரவை – சிவ
விருந்தாக அழைக்கிறா(ன்) ஒருவன் !

பேசாமல் பேசியே உயிரை – தன்
பிடிக்குள்ளே வைக்கிறா(ன்) ஒருவன்
தூசான உலகென உணர – திரு
ஓடுதனைக் காட்டுறா(ன்) ஒருவன் !

தானெனும் அகந்தையே அழிய – சிவத்
தண்மையுடன் அணைக்கிறா(ன்) ஒருவன்
தூயதோர் இறைமையே வழிய – எங்கும்
துடிப்போடு இயங்குறா(ன்) ஒருவன் !

நானவனை உணர்கிற வழியை – சிவ
நாமத்தா(ல்) ஓதினா(ன்) ஒருவன்
ஆனதனால் அடங்கினே(ன்)அகத்தில் – சிவ
அமுதாகக் கிடக்கிறா(ன்) ஒருவன் !

(பிரதோஷ தினம் : 02.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *