c141b45c-ffd0-434f-8d00-d7b014507445
—————————————–

தானதன தானதந்த தனதான
திருவல்லிக் கேணி
—————————————

“சோணமலை மீதமர்ந்து -ரமணேசர்
ஞானமலை யாயகந்தை -யதன்முலம்
காணுவகை தானுகந்த -வழியேகி
நானெனது பேதபந்தம் -விலகாதோ
தானமென மூணுகந்த -பலிசாய
வானவழி போயளந்த -நெடுமாலே
சேணமுற கேணிநின்று -கவிராஜன்
கானமென வேவுயர்ந்த -பெருமாளே”….
———————————————————————————————————–

பெருமாள் திருப் புகழ்….
———————————————-

தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன -தனதான

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள்
——————————————————————————–

“ஒருகள்ளக் காதல் வாட்டிட வேடுவ
குறவள்ளிக் காக காட்டினில் மேவிடும்
சுரரில்லக் காவல் சூர்ப்பகை வேலவன் -முறைமாம

பலவெள்ளிக் காசு பார்ப்பினும் ஊழவன்
உனையள்ளிப் போக வீட்டிடை ஏகுமுன்
வரமள்ளித் தாராய் வாய்த்திட சோணையின் -ரமணேச

குரு,அய்யப் பாடு ஆக்கிடும் ஆணவ
மதையள்ளிப் போடும் சாக்கில்வி சாரணை
புரிவுள்ளத் தாழம் பூத்திடும் மாமெனும் -உபதேசம்

மனதுய்யப் ,பாதம் வீற்றிட மாதுபொன்
அலைவெள்ளப் பாலில் போட்டிடும் சேடனில்
அறிபள்ளிக் கார ,ப்ராட்டியர் சூழவந் -தருள்வாயே

முறைஅவ்வைப் பேதை கூட்டுடன் ஏகிட
இலைவில்வக் காரர் வீட்டினில் சேரவும்
தலைபெய்அத் தோளில் தூக்கிய வேழனுன் -சுடராழி

தனைகவ்வக் காதின் நாற்கர ஆடலில்
நகையள்ளித் தூவும் மேய்த்திடும் கோகுல
உறிநெய்யைப் பாலை ஆய்ச்சியர் ஏசிட -களவாடி

உறுகொள்ளைக் கார மூர்த்தியுன் லீலையை
தடைசெய்யத் தாம்பில் பூட்டிடு தாயவள்
உரலள்ளிப் போக வீழ்த்தினை மாமரம் -ஒருநாளில்

கருமல்லிப் பூவுன் காத்திர வாசனை
விரலுய்யத் தீயில் பார்த்தவுன் பாரதி
திருவல்லிக் கேணி பார்த்தனின் சாரதி -பெருமாளே”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *