மீ.விசுவநாதன்

வெள்ளையாய் ஒருநேரம் -கரு

நீலமாய் ஒருநேரம் – மேக

வெள்ளமாய் ஒருநேரம் -செந்

தீயென ஒருநேரம் -இடி

மின்னலாய் ஒருநேரம் – சுடும்

வெய்யிலாய் ஒருநேரம் -ஒளிப்

பின்னலாய் ஒருநேரம் – வான்

பெற்றதே அவதாரம்.

கறுப்பென ஒருநேரம் – நிலாக்

கடலென ஒருநேரம் – புள்

பறக்கிற ஒருநேரம் – தூள்

பறக்கிற ஒருநேரம் – விண்

மீன்களால் ஒருநேரம் – வண்ண

வில்லென ஒருநேரம் – பால்

வான்வெளி அலங்காரம் -இறை

வாசலின் புதுக்கோலம்.

(10.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *