மீ.விசுவநாதன்

 
அடடா அடடா ஆண்டவனே – என்
அகத்தில் அன்பு பூண்டவனே !
விடடா விட்டா என்றாலும் – ஒரு
விளக்காய் உள்ளே ஒளிர்பவனே !

எதற்கோ வந்து என்னுள்ளே – தன்
இருப்பைக் காட்டிச் சிரிப்பவனே !
பதற்கும் பசுமை காட்டுகிற – தன்
பரந்த குணத்தால் நிறைந்தவனே !

எவரோ துன்பம் அடைந்தாலும் – என்
இதயம் வலிக்கச் செய்பவனே !
சுவராய் இருக்கும் என்மூலம் – நல்ல
சோதிக் கவிதை வரைபவனே !

கவலை வந்த அணுநொடியில் – உள்
கடவு(ள்) உணர்வு தருபவனே !
திவலை நானாய் உணர்வதற்கு – பெரு
வெள்ள வெளியாய் இருப்பவனே !

இன்னும் உன்னை உணராமல் – இவன்
இருக்கும் நிலையை வைத்தவனே !
தன்னுள் என்னை வைத்ததனால் – அதில்
தவறைக் காணா நல்லவனே !

(14.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *