ஆய கலைகள் அறுபது நான்கு கலையே
யோகாவும் இதனில் அடங்கும் கலையே
யோகிகளும், துறவிகளும் வளர்த்த கலையே
நமது நாட்டினில் தோன்றிய கலையே !
அனுதினம் யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
அது உடலினை உறுதி செய்து, நோய் நீக்கும் இடமாகும் 1

உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் தினமும் மேற்கொள்ளுங்கள்
அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

யோகாசனங்களில் பல வகைகள் உண்டு
சில யோகாசனங்களே மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்
இதுவே உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *